search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவிநாசி பேரூராட்சி எரிவாயு மயானத்தின்  செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தம்
    X

    அவிநாசி பேரூராட்சி எரிவாயு மயானத்தின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தம்

    • அவிநாசி பழைய பஸ் நிலையம் பின், பேரூராட்சி எரிவாயு மயானம் செயல்பட்டு வருகிறது.
    • எரிவாயு மயான கட்டடம் முழுவதும் புதிதாக பெயின்ட் அடிக்கும் பணிகள் நடக்கிறது.

    அவிநாசி :

    அவிநாசி பழைய பஸ் நிலையம் பின், பேரூராட்சி எரிவாயு மயானம் செயல்பட்டு வருகிறது. எரிவாயு மயானத்தில் உள்ள புளோயர், புகை போக்கி, மின்மோட்டார், அமரர் படுக்கை மற்றும் பெயின்ட் அடிப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தற்காலிகமாக எரிவாயு மயான பணிகள் நிறுத்தப்படுகின்றது.

    இது குறித்து பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி கூறுகையில், பேரூராட்சி எரிவாயு மயானத்தில் புகை போக்கி, புளோயர், மின் மோட்டார் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. எரிவாயு மயான கட்டடம் முழுவதும் புதிதாக பெயின்ட் அடிக்கும் பணிகள் நடக்கிறது. பிப்ரவரி 3ந் தேதி முதல் மயானம் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார்.

    Next Story
    ×