search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆட்டோ டிரைவர் தற்கொலை
    X

    ஆட்டோ டிரைவர் தற்கொலை

    • கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம்.
    • அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் அம்மாபேட்டை சோழன் மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). ஆட்டோ டிரைவரான இவருக்கு ரேகா (37) என்ற மனைவி உள்ளார். கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம். நேற்று மாலை வழக்கம் போல் குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் விரக்தி அடைந்த சுரேஷ் பொன்னம்மாபேட்டை புது தெருவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று தூக்குப்போட்டு கொண்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதற்குள் சுரேஷ் இறந்து விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×