search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேகடஅள்ளி அரசு பள்ளியில் முப்பெரும் விழா
    X

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி யர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    ரேகடஅள்ளி அரசு பள்ளியில் முப்பெரும் விழா

    • ஓவிய கண்காட்சி, உணவு திருவிழா, இலக்கிய மன்ற விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
    • பாரம்பரிய உணவுகளை விதவிதமாக சமைத்துக் கொண்டு வந்திருந்து விழாவில் கண்காட்சிக்கு வைத்திருந்தனர்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ரேகட அள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஓவிய கண்காட்சி, உணவு திருவிழா, இலக்கிய மன்ற விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு கடத்தூர் வட்டார கல்வி அலுவலர் முருகன் தலைமை வகித்தார். வட்டாரவட்டார கல்வி அலுவலர் மகேந்திரன் முன்னிலை வகித்தார்.

    தலைமை ஆசிரியர் (பொறுப்பு) மதனகோபாலன் அனைவரையும் வரவேற்றார். விழாவில் புலவர் பரமசிவம் கம்பன்கழக துணை தலைவர் மற்றும் முன்னாள் செயலாளர் கலந்துகொண்டார்.

    விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பாரம்பரிய உணவுகளை விதவிதமாக சமைத்துக் கொண்டு வந்திருந்து விழாவில் கண்காட்சிக்கு வைத்திருந்தனர். விழாவில் முடிவில் அறிவியல் ஆசிரியர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    விழாவிற்கான ஏற்பாடு களை பள்ளி ஆசிரியர்கள் சக்திவேல், லதாமகேஸ்வரி, விமலா ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×