search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையத்தில்  10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது
    X

    மேட்டுப்பாளையத்தில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது

    • தொழிலாளிக்கு திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர்.
    • பெற்ற மகள் என்றும் பார்க்காமல் பாலியல் தொல்லை கொடுத்தார்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மேட்டுப்பா ளையம் பகுதியை சேர்ந்தவர் 41 வயது தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர்.

    இவரது 2-வது மகள் 16 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது முதல் மகள் மற்றும் கடைசி மகள் அவர்களது தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர். 2 மகள் மட்டும் பெற்றோருடன் இருந்து வந்தார். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது மனைவி கோபித்து கொண்டு தனது சொந்த ஊருக்கு சென்றார்.

    சம்பவத்தன்று தொழிலாளியின் 2-வது மகள் 16 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தார்.அப்போது வீட்டுக்கு வந்த சிறுமியின் தந்தை திடீரென சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி அவரிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார். ஆனால் அவர் பெற்ற மகள் என்றும் பார்க்காமல் பாலியல் தொல்லை கொடுத்தார். பின்னர் மகளிடம் , நடந்ததை யாரிடமும் செல்ல கூடாது என மிரட்டி அங்கிருந்து சென்றார்.

    இதனால் பயந்து போன சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்தார். சம்பவத்தன்று சிறுமி மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையம் சென்றார்.அங்கு போலீசாரிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதார். அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சிறுமியிடம் இருந்து புகார் பெற்றனர்.

    இதையடுத்து போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சிறுமியின் வீட்டுக்கு சென்று அங்கு இருந்த ெதாழிலாளியை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×