என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சாதி மதமற்றவர் சான்றிதழ் கோரிய விண்ணப்பதாரர்- இரண்டு வாரங்களுக்குள் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
- சாதி மதம் இல்லை என்று சான்றிதழ் கோரி அம்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம்,
- தாசில்தார் சான்றிதழ் வழங்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.
சென்னை அண்ணாநகரை சேர்ந்த ஜெகதீசன் என்பவர் தனது மகன் யுவன் மனோஜை, அம்பத்தூரில் உள்ள பள்ளியில் சேர்த்த போது, அங்குள்ள அலுவலர்கள், விண்ணப் படிவத்தில் சாதி, மதம் தொடர்பான பத்தியை நிரப்ப வலியுறுத்தினர். அவர் மறுத்ததால், அந்த சிறுவனை பள்ளியில் சேரத்துக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது
இதையடுதது தமது மகனுக்கு சாதி, மதம் இல்லை என்ற சான்றிதழ் வழங்கக் கோரி அம்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஜெகதீசன் விண்ணப்பித்திருந்தார். அவர் கோரியபடி சாதி மதம் இல்லை என்ற சான்றிதழை அம்பத்தூர் தாசில்தார் வழங்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெகதீசன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சாதி, மதம் இல்லை என்ற சான்றிதழை வழங்குவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தாசில்தார் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து யுவன் மனோஜிற்கு சாதி, மதம் இல்லை என்ற சான்றிதழை இரண்டு வாரங்களில் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்