search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆத்தூர் கோவிலில் ஆனி உத்திர அபிஷேகம்
    X

    சிறப்பு அலங்காரத்தில் சுவாமி.


    ஆத்தூர் கோவிலில் ஆனி உத்திர அபிஷேகம்

    • நடராஜருக்கு சிறப்பு அலங்காரத்துடன் தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.
    • நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது

    ஆத்தூர்:

    ஆத்தூர் சோமநாத சுவாமி கோவிலில் ஆனி உத்திர நாளன்று நடராஜர் அபிஷேகம் நடைபெற்றது. காலையில் கும்பம் வைத்து யாகபூஜைகள் நடைபெற்றது. சோமநாத சுவாமி, சோசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஆனந்த நடராஜர் சமேத சிவகாம சுந்தரி அம்பாளுக்கு ஆனி உத்திர சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நடராஜருக்கு சிறப்பு அலங்காரத்துடன் தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.

    நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர் ஆத்தூர் கீழரதவீதி தெய்வத்திருவாளர்கள் வேலாயுதப்பெருமாள் பிள்ளை, ராமலெட்சுமி அம்மாள் குடும்பத்தினர் மற்றும் தேவஸ்தான பூஜா ஸ்தானீகர் ஹரிஹர சுப்பிரமணிய பட்டர் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×