search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமூக வலைதளங்களில் படம் வெளியானதால் என்ஜினீயரிங் மாணவி தற்கொலை முயற்சி
    X

    சமூக வலைதளங்களில் படம் வெளியானதால் என்ஜினீயரிங் மாணவி தற்கொலை முயற்சி

    • மாணவியின் படத்தை மர்ம நபர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.அதனை அவர் பலமுறை அழிக்க முயன்று முடியாததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
    • சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் படங்களை வெளியிட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    ஈரோட்டைச் சேர்ந்தவர் 21 வயது மாணவி. இவர் சேலம் கருப்பூர் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் தங்கி 4-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் விடுதியில் இருந்த அவர் திடீரென கழுத்து மற்றும் கை நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதனை பார்த்த சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள் அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த கருப்பூர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவரது படத்தை மர்ம நபர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

    அதனை மாணவி பலமுறை அழிக்க முயன்றார். ஆனால், அழிக்க முடியாததால் தனது படத்தை வேறு ஏதாவது மார்பிங் செய்து வெளியிட்டு விடுவார்களோ? என பயந்து மனவேதனை அடைந்த அவர் தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.

    இதுகுறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் படங்களை வெளியிட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×