search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் 2 ஆண்டுகளாக தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபர் கைது
    X

    கைது செய்யப்பட்ட ராஜ்குமார்.

    தூத்துக்குடியில் 2 ஆண்டுகளாக தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபர் கைது

    • ராஜ்குமார் மீது பல்வேறு தொடர் திருட்டு வழக்குகள் இருந்து வருகிறது.
    • ராஜ்குமாரை பிடிக்க தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சுப்பையா முதலியார்புரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது23).

    இவர் மீது புதுக்கோட்டை, சிப்காட், தாளமுத்துநகர், தென்பாகம், வடபாகம், உட்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வீடு புகுந்து திருடுவது, மோட்டார் சைக்கிள் திருடுவது, வழிப்பறி உட்பட பல்வேறு தொடர் திருட்டு வழக்குகள் கடந்த 2020-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது.

    இதேபோல் சிப்காட் ஜோதி நகரில் மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற வழக்கில் ராஜ்குமார் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

    பல்வேறு தொடர் திருட்டில் ஈடுபட்டு போலீசாரிடம் பிடிபடாமல் தலைமறைவாக இருந்து வந்த ராஜ்குமாரை பிடிக்க தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். அதன்பேரில் ஏ.எஸ்.பி. சந்தீஸ் தலைமையில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன், மற்றும் கணேஷ் உள்ளிட்ட தனிப்படை போலீசார் ராஜ்கு மாரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த வந்த ராஜ்குமாரை இன்று காலை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×