search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆற்றங்கரையில் பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்பு
    X

    ஆற்றங்கரையில் பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்பு

    • பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை அழுது கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை ஆற்றங்கரையில் போட்டு சென்றது யார் என விசாரணை.

    சுவாமிமலை:

    தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள கொத்தங்குடி மண்ணியாற்றங்கரையில் துணி துவைப்பதற்கு பொதுமக்கள் சிலர் சென்றனர். அப்போது பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது பிறந்து ஒரு சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை அழுது கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    உடனடியாக குழந்தையை மீட்டு கொத்தங்குடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவ மனைக்கு குழந்தையை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆம்புலன்ஸ் வர கால தாமதம் ஏற்பட்டதாலும், குழந்தையை ஒப்படைத்து 2 மணி நேரமாகியும் திரவ உணவு கொடுக்கப்படாததாலும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கொத்தங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு குழந்தை அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு சிசிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை ஆற்றங்கரையில் போட்டு சென்றது யார் ? குழந்தையின் பெற்றோர் யார் ? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×