என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வள்ளியூரில் 50 பவுன் நகை கொள்ளை-சி.சி.டி.வி. காமிரா மூலம் போலீசார் விசாரணை
- தடயவியல் நிபுணர்கள் வீட்டின் கதவு, பீரோவில் உள்ள தடயங்களை ஆ ய்வு செய்தனர்.
- இன்ஸ்பெக்டர் ராஜலெட்சுமி தலைமையிலான போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வள்ளியூர்:
வள்ளியூர் ராஜரத்தினம் நகரை சேர்ந்தவர் மரியதாசன். விவசாயி. இவரது மனைவி கிறிஸ்டி சகாயராணி. இவர் செவிலியராக வேலை பார்த்து வருகிறார்.
நகை கொள்ளை
மரியதாசன் நேற்று வழக்கம் போல் கோவனேரி கிராமத்தில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றுவிட்டார். அவரது மனைவி வேலைக்கு சென்றுவிட்டார். மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு 50 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தது.
இது தொடர்பாக மரியதாஸ் வள்ளியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜலெட்சுமி தலைமையிலான போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கொள்ளையடிக்கப்பட்ட வீட்டை வள்ளியூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சமய்சிங் மீனா நேரில் சென்று ஆய்வு செய்தார். நெல்லையில் இருந்து மோப்பநாய் ரிக்கி வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. தடயவியல் நிபுணர்கள் வீட்டின் கதவு, பீரோவில் உள்ள தடயங்களை ஆ ய்வு செய்தனர்.
மேலும் மரியதாஸ் வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு காமிராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தலைமை காவலர் ராஜா, தனிப்பிரிவு தலைமைக்காவலர் கிருஷ்ணமகாராஜா ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்