search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்வராயன் மலையில் 5 பேரல் சாராய ஊறல் அழிப்பு
    X

    கள்ளச்சாராய ஊறல்களை அழித்த போலீசார்.

    கல்வராயன் மலையில் 5 பேரல் சாராய ஊறல் அழிப்பு

    • அப்பகுதியில் 5 பேரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராய உறல்களை அழித்து அப்புறப்படுத்தினர்.
    • கரியக்கோயில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் கல்வராயன் மலை குன்னூர் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 பேரல் கள்ளச்சாராய ஊறல்களை மதுவிலக்கு தடுப்பு பிரிவு மற்றும் கரியக்கோயில் போலீஸார் அழித்து அப்புறப்படுத்தினர்.

    கல்வராயன்மலை கருமந்துறை அடுத்த குன்னூர் சேத்தூர் பகுதியில் சாராயம் தயாரிப்பதற்காக சாராய ஊறல்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ஆத்தூர் மதுவிலக்கு போலீஸார் மற்றும் கரியக்கோயில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதையடுத்து போலீசார் நேற்று சேத்தூர் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்பகுதியில் 5 பேரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராய உறல்களை அழித்து அப்புறப்படுத்தினர்.

    இது குறித்து கரியக்கோயில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×