search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டியில் 1 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது
    X

    கைது செய்யப்பட்ட வர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவையும் படத்தில் காணலாம். 

    கோவில்பட்டியில் 1 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது

    • போலீசாரை கண்டதும் 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களில் 3 பேரை போலீசார் விரட்டி பிடித்தனர்.
    • விசாரணையில் தப்பி ஓடியவர்கள் மகேஷ்குமார்,ராமகிருஷ்ணன் என்பதும் தெரிய தெரியவந்தது.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் கோவில்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் 5 பேர் நின்று கொண்டிருந்தனர்.

    போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். எனினும் போலீசார் அவர்களில் 3 பேரை விரட்டி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கோவில்பட்டி ஸ்ரீராம் நகரை சேர்ந்த பொன்பிரகாஷ் (வயது 26), செக்கடி 3-வது தெருவை சேர்ந்த ராகேஷ் சர்மா (26), ராஜூ நகர் இ.பி. காலனியை சேர்ந்த விஷ்ணு (22) என்பது தெரியவந்தது.

    மேலும் தப்பி ஓடியவர்கள் பசும்பொன் நகரை சேர்ந்த மகேஷ்குமார் ( 27), ஸ்ரீராம் நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் ( 27) என்பதும் தெரிய தெரியவந்தது. மேலும் அவர்கள் விற்பனைக்காக 1 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×