search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் நன்னடத்தை விதிகளை மீறிய 3 பேர் கைது
    X

    கோப்பு படம்

    திண்டுக்கல்லில் நன்னடத்தை விதிகளை மீறிய 3 பேர் கைது

    • திண்டுக்கல்லில் நன்னடத்தை விதிகளை மீறிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்
    • நன்னடத்தை பிணை முறிப்பத்திரத்தின் காலம் முடிவதற்குள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டனர்

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மேலப்பட்டியைச் சேர்ந்தவர் மரியராஜ் மகன் ஜான், ஜம்புளியம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மாதவன் ஆகியோரை குற்றச் செயல்கள் செய்ததால் திண்டுக்கல் தாலுகா போலீசார் கைது செய்தனர். இதே போல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த வீரப்பன் மகன் விக்னேசை திண்டுக்கல் தெற்கு போலீசார் கைது செய்தனர்.

    3 பேரையும் நிர்வாகத்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தி நன்னடத்தை பிணை முறிப்பத்திரம் பெறப்பட்டது. ஆனால் அந்த காலம் முடிவதற்குள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் 3 பேரையும் கைது செய்ய நிர்வாகத்துறை நடுவர் உத்தரவிட்டார்.

    அதன் படி போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.

    Next Story
    ×