search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல்லில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 235 மனுக்கள் பெறப்பட்டன
    X

    நாமக்கல்லில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 235 மனுக்கள் பெறப்பட்டன

    • கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • மாவட்ட வருவாய் அதிகாரி மணிமேகலை தலைமை தாங்கினார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி மணிமேகலை தலைமை தாங்கினார். இதில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 235 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.

    மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட

    வருவாய் அலுவலர் மணி மேகலை, அவற்றை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கு மாறு சம்பந்தப்பட்ட அலுவ லர்களிடம் வழங்கினார். அதேபோல கலெக்டர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து மனுக்களை பெற்று சம்மந்தப்பட்ட அலுவலரிடம் வழங்கி விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    Next Story
    ×