search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணம் கொள்ளை
    X
    பணம் கொள்ளை

    பெரியபாளையம் அருகே பெட்ரோல் பங்க்கில் ரூ.1½ லட்சம் கொள்ளை

    பெரியபாளையம் அருகே பெட்ரோல் பங்க்கில் ரூ.1½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள வடமதுரை, பெரிய காலனி அருகே தாமரைபாக்கம்-பெரிய பாளையம் நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் உள்ளது. நேற்று இரவு விற்பனை பணம் ரூ.1½ லட்சத்தை பங்க்கில் உள்ள அறையில் வைத்து விட்டு ஊழியர்கள் தூங்கினர்.

    இதனை நோட்டமிட்ட மர்மகும்பல் அறையின் கதவை உடைத்து புகுந்து கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். மேலும் கண்காணிப்பு காமிரா பதிவையும் எடுத்து சென்று உள்ளனர். இதுகுறித்து பெரிய பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×