search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழாவில் லயன் சங்க தலைவர் மருதுபாண்டியன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    X
    விழாவில் லயன் சங்க தலைவர் மருதுபாண்டியன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    லயன் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

    சோழவந்தானில் லயன் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவிஏற்பு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் நகர அரிமா சங்கத் தலைவராக தொழிலதிபரும், கல்வியாளருமான எம். மருதுபாண்டியன் பதவியேற்றார். முன்னாள் மாவட்ட ஆளுநர் பாண்டியராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதை தொடர்ந்து சண்முகசுந்தரம் புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். 

    மாவட்ட ஆளுநர் மணிகண்டன், முன்னாள் மாவட்ட ஆளுநர் செல்லப்பாண்டி, மாவட்ட 2-ம் துணை ஆளுநர் சசிகுமார், தையல் மிஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மாவட்ட அமைச்சரவை முதன்மை நிர்வாகிகள் ஜெகநாதன், பிச்சை மாரிமுத்து, செல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். 

    பின்னர்  முதல் துணைத்தலைவர் கண்ணன், 2-ம் துணைத்தலைவர் பாஸ்கரன், செயலாளர் பிச்சைமணி, பொருளாளர் கந்தன், முன்னாள் தலைவர் ஆறுமுகம், உறுப்பினர்  சரவணன், எல். சி. ஐ.எப். ஒருங்கிணைப்பாளர் முத்துலிங்கம், சேவை திட்ட பொறுப்பாளர் பரிசுத்த ராஜன், மக்கள் தொடர்பாளர் தங்கராஜ், சங்க ஆலோசகர் மற்றும் பொறுப்பாளர் செல்லப்பாண்டி, சங்க ஒருங்கிணைப்பாளர் ஜவகர் ஆகியோர் 2022-23-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர். 
    Next Story
    ×