என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு பயன்பாட்டிற்கு திறப்பு
Byமாலை மலர்1 Jun 2022 9:39 AM GMT (Updated: 1 Jun 2022 9:39 AM GMT)
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிகளின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை அரசு மருத்து வமனையில் தீவிர சிகிச்சை பிரிவு, நோயா ளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 8 படுக்கைகள் கொண்ட அனைத்து வசதிகளுடன் கூடிய முற்றிலும் குளிரூட்டப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு 1,000 முதல் 2,000 வரை புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் தமிழக அரசின் சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 8 படுக்கைகள் கொண்ட அனைத்து வசதிகளுடன் கூடிய, முற்றிலும் குளிரூட்ட ப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ., நகராட்சித் தலைவர் சண்முகப்பிரியா, தஞ்சை மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநர் டாக்டர் திலகம் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து தீவிர சிகிச்சை பிரிவை நோயாளிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
இந்த தீவிர சிகிச்சை பிரிவில் ஒவ்வொரு படுக்கை க்கும் வெண்டிலேட்டர்கள், அனைத்து உறுப்புகளையும் கண்காணிக்கும் கருவியான மல்டி பாரா மானிட்டர், ரிமோட் கண்ட்ரோலுடன் கூடிய படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதிகள், உயிர்காக்கும் திரவங்களை ஏற்றும் கருவிகள், இசிஜி வசதி என அனைத்தும் உள்ளது. இதனால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த தீவிர சிகிச்சை பிரிவில் 24 மணி நேரமும் மருத்துவக் குழுவினர் செயல்படுவார்கள் என்று பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் அன்பழகன் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X