search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழிப்புணர்வு பேரணியை மேக்ரோ பொன் தங்கதுரை கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.
    X
    விழிப்புணர்வு பேரணியை மேக்ரோ பொன் தங்கதுரை கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.

    ஏர்வாடியில் விழிப்புணர்வு பேரணி

    ஏர்வாடியில் புகையிலை மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    வள்ளியூர்:

    ஏர்வாடியில் புகையிலை மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

    ஏர்வாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை சார்பில் நடைபெற்ற இப்பேரணியை வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி கிளப் தலைவர் மேக்ரோ பொன் தங்கதுரை கொடி அசைத்து தொடங்கிவைத்தார். 

    செயலாளர் சுகிர்கந்தன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

    பேரணி பிரதான சாலை வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை தலைவர்  சுப்பிரமணியன் செய்திருந்தார்.
    Next Story
    ×