என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர்- குழந்தை திருமணம் செய்து வைத்த சகோதரி மீது வழக்கு பதிவு
Byமாலை மலர்1 Jun 2022 8:42 AM GMT (Updated: 1 Jun 2022 8:42 AM GMT)
ஜோலார்பேட்டை அருகே 17 வயது சிறுமியை குழந்தைத் திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் மற்றும் அவரது சகோதரி மீது ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த ஒரு கிராமத்தில் வசித்து வரும் 17 வயது சிறுமியை சின்ன மோட்டூர் பகுதியை சேர்ந்த முனிராஜ் என்பவரின் மகன் ராஜீவ் என்பவர் கடந்த 4 ஆண்டாக காதலித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருப்பூர் பகுதியில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் சிறுமி தற்போது 6 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
இதனால் திருப்பூர் பகுதியில் உள்ள ராஜீவ் சகோதரி ராஜேஸ்வரி அவரது வீட்டில் கடந்த 26-ந்தேதி இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிறுமியின் தந்தை நேற்று முன்தினம் இரவு ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தனது மகளை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீதும் குழந்தை திருமணம் செய்து வைத்த அவரது சகோதரி ராஜேஸ்வரி மீதும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அக்காள், தம்பியை தேடி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை அடுத்த ஒரு கிராமத்தில் வசித்து வரும் 17 வயது சிறுமியை சின்ன மோட்டூர் பகுதியை சேர்ந்த முனிராஜ் என்பவரின் மகன் ராஜீவ் என்பவர் கடந்த 4 ஆண்டாக காதலித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருப்பூர் பகுதியில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் சிறுமி தற்போது 6 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
இதனால் திருப்பூர் பகுதியில் உள்ள ராஜீவ் சகோதரி ராஜேஸ்வரி அவரது வீட்டில் கடந்த 26-ந்தேதி இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிறுமியின் தந்தை நேற்று முன்தினம் இரவு ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தனது மகளை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீதும் குழந்தை திருமணம் செய்து வைத்த அவரது சகோதரி ராஜேஸ்வரி மீதும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அக்காள், தம்பியை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X