என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மாமல்லபுரத்தில் 10-ம் வகுப்பு மாணவன் கடலில் மூழ்கி பலி?
Byமாலை மலர்31 May 2022 7:46 AM GMT (Updated: 31 May 2022 7:46 AM GMT)
கடைசி தேர்வை எழுதி விட்டு அவரது நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலியானார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த பையனூரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் பன்னீர்செல்வம் (வயது15). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பத்தாம் வகுப்பு கடைசி தேர்வை எழுதி விட்டு அவரது நண்பர்கள் மவுரி, தமிழ்ச்செல்வன் மற்றும் சிலருடன் மாமல்லபுரம் சென்று கடலில் குளித்தார்.
அப்போது ராட்சத அலையில் சிக்கி கடலின் உள்ளே பன்னீர்செல்வம் இழுத்து செல்லப்பட்டார்.அருகில் நின்று குளித்த நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
இது குறித்து மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் தீயணைப்பு படையினர் உதவியுடன் மாயமான பன்னீர்செல்வத்தை கடலில் தேடிவருகின்றனர். அவர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X