search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை
    X
    கொலை

    பெரும்பாக்கத்தில் தொழிலாளி வெட்டிக்கொலை

    குடும்ப தகராறில் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் பெரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
    வேளச்சேரி:

    சென்னை பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம் 8 அடுக்கு பகுதியில் வசித்து வந்தவர். சுந்திரமூர்த்தி (வயது 37), மனைவி சுகந்தி(32). டைல்ஸ் ஓட்டும் தொழிலாளி. இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

    நேற்று இரவு அவர், பெரும்பாக்கம் நேதாஜி நகர் மெயின் ரோடு அருகே நடந்து சென்றார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென சுந்தர மூர்த்தியை அரிவால், கத்தியுடன் வழிமறித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தப்பி ஓட முயன்றார். ஆனாலும் விரட்டிச்சென்ற மர்மநபர்கள் சுந்தரமூர்த்தியை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பெரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுந்தரமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளி யார்? கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. குடும்ப தகராறில் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் பெரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
    Next Story
    ×