search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயி ஒருவரின் வயலில் பெண்கள் குறுவை நடவு பணியில் ஈடுபடும் காட்சி.
    X
    விவசாயி ஒருவரின் வயலில் பெண்கள் குறுவை நடவு பணியில் ஈடுபடும் காட்சி.

    மின் மோட்டார் மூலம் குறுவை நடவு பணிகள் தீவிரம்

    தஞ்சை அருகே மின் மோட்டார் மூலம் குறுவை நடவு பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. இதில் பாடல்கள் பாடி பெண்கள் நாற்று நட்டனர்.
    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை  மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 

    குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பு அதிகரிக்கும். 

    தாமதமாக திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். இந்த நிலையில் இந்த ஆண்டு சுதந்திரத்துக்குப் பிறகு முதல் முறையாக முன்கூட்டியே மேட்டூர் அணை இந்த மாதம் 24-ம் தேதி திறக்கப்பட்டது.

    மேட்டூர் அணையில் இருந்து  தண்ணீர்  27-ந் தேதி தஞ்சை மாவட்டம் கல்லணையை வந்தடைந்து.  பின்னர் கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
    முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் 3  லட்சம் ஏக்கருக்கு  மேல் குறுவை சாகுபடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.இதற்கிடையில் தூர்வாரும் பணி நடந்து வருவதாலும், பாலப் பணிகள் நடைபெறுவதாலும்க ல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் கல்லணை கால்வாய் நம்பியுள்ள விவசாயிகள் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை.  

    இருந்த போதிலும் தற்போது தஞ்சாவூர் அருகே வெண்ணாறு ஆற்று பாசன பகுதிகளான உதராமங்களம் , குருங்களூர், திட்டை, கூடலூர், மணக்கரம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மின்மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சி குறுவை நடவு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
     
    நிலத்தில் டிராக்டர் வைத்து உழுது பெண்கள் பாடல்கள் பாடி நடவு பணியில்  ஈடுபட்டு வருகின்றனர்.  தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்,  விதை  உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×