என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆசனூர் அருகே 13 கிலோ புகையிலை- போதை பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் ஆசனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வெங்கிடு சாமி மற்றும் போலீசார் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அவர்கள் ஆசனூர் சத்தியமங்கலம்- மைசூர் ரோட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் 3 பேர் பேக் மற்றும் கட்டை பையுடன் நின்று கொண்டு இருந்தனர். சந்தேகத்தின் பேரில் போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.
அப்போது அதில் தடை செய்யப்பட்ட பாக்குகள், புகையிலை உள்பட போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் புதுகோட்டை மாவட்டம் கோபாலபட்டினம் பகுதியை சேர்ந்த சதக்கத்துல்லா (24), ரகுமான்கான (24), முகமது சியமுதீன் (20) எனவும் அவர்கள் போதை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களிடம் இருந்து 13 கிலோ புகையிலை மற்றும் போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்