search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து இருந்த 4 பேர் கைது

    காரில் 224 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.
    கோவை:

    கோவை தடாகம் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினார்  தலைமையிலான போலீசார் பன்னிமடை தாழியூர் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 224 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் புகையிலை பொருட்களை கடத்தி வந்த குரும்பபாளையத்தை சேர்ந்த லட்சுமணன் (வயது 22), மதன்சிங் (22), இந்திரகுமார் (22) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    அன்னூர்  அருகே உள்ள குன்னத்தூரில் குடோன் வாடகைக்கு எடுத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி யராஜ் தலைமையிலான போலீசார்  தகவல் வந்த இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு இருந்த 12 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனை பதுக்கி வைத்து இருந்த உலகநாதன் (45) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.    

    Next Story
    ×