search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணை நீர்மட்டம் 117.82 அடியாக சரிவு

    மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் குறுவை சாகுபடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஒகேனக்கல்லில் நேற்று மாலை 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

    ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக அருவியில் குளித்தும், குடும்பத்துடன் பரிசல் சவாரியும் சென்று வருகிறார்கள். கோடை விடுமுறை இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில் சில நாட்களாக ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் மேட்டூர் அணைக்கு நேராக வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 8 ஆயிரத்து 58 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து விநாடிக்கு 5 ஆயிரத்து 166 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரியில் குறுவை சாகுபடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் மீண்டும் சரிய தொடங்கி உள்ளது.

    நேற்று 118.11 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மீண்டும் சரிந்து 117.82 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் சரியும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்பு உள்ளது.

    Next Story
    ×