search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
    X
    களக்காடு அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

    களக்காடு அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா

    களக்காடு முப்புடாதி அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா நடந்தது.
    களக்காடு:

    களக்காடு நாடார் புதுத்தெரு முப்பிடாதி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது.

    இதையொட்டி சிறப்பு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து கடம்புறப்பாடு நடந்தது.

    யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கும்பங்களுடன் சிவாச்சாரியார்கள் கோயிலை சுற்றி வந்தனர்.
     அதன் பின் கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேக விழா கோலாகலத்துடன் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து முப்பிடாதி அம்மன், சுடலைமாடன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் மகா அபிஷேகங்களும், சிறப்பு அலங்கார தீபாராதனைகளும் இடம்பெற்றது.

    மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×