என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சாத்தான்குளம் ஜமாபந்தியில் 100 பேருக்கு உடனடி நிவாரணம்
Byமாலை மலர்27 May 2022 9:22 AM GMT (Updated: 27 May 2022 9:22 AM GMT)
சாத்தான்குளம் வட்டத்தில் 2-வது நாளாக நடந்த ஜமாபந்தியில் 100 பேருக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட்டது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் வட்டத்தில் ஜமாபந்தி முகாம் நேற்று முன்தினம் தொடங்கியது. திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. புகாரி தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்.
2-ம் நாளான நேற்று பிடானேரி, எழுவரைமுக்கி, சாத்தான்குளம், உள்வட்டம், பன்னம்பாறை, சாத்தான்குளம், செட்டியிருப்பு, புதுக்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குறை தொடர்பாக மனுக்கள் கொடுத்தனர்.
அதில் பெறப்பட்ட 206 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் உடனடியாக 100 பேர்களுக்கு பட்டா மாறுதல், முதியோர் உதவிதொகை உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதில் ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் ராமச்சந்திரன், தாசில்தார் தங்கையா, மண்டல துணை தாசில்தார் மைக்கேல், தலைமையிடத்து துணை தாசில்தார் கோமதி சங்கர், வருவாய் ஆய்வாளர் பாலசுந்தரம் உள்பட பலர் கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X