search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிவாரண உதவிகள் வழங்கப்பட்ட காட்சி.
    X
    நிவாரண உதவிகள் வழங்கப்பட்ட காட்சி.

    சாத்தான்குளம் ஜமாபந்தியில் 100 பேருக்கு உடனடி நிவாரணம்

    சாத்தான்குளம் வட்டத்தில் 2-வது நாளாக நடந்த ஜமாபந்தியில் 100 பேருக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட்டது.
    சாத்தான்குளம்:
     
    சாத்தான்குளம் வட்டத்தில் ஜமாபந்தி முகாம் நேற்று முன்தினம் தொடங்கியது. திருச்செந்தூர் ஆர்.டி.ஓ.  புகாரி தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்.   

    2-ம் நாளான நேற்று பிடானேரி, எழுவரைமுக்கி, சாத்தான்குளம், உள்வட்டம், பன்னம்பாறை, சாத்தான்குளம், செட்டியிருப்பு, புதுக்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குறை தொடர்பாக மனுக்கள் கொடுத்தனர். 

    அதில் பெறப்பட்ட 206 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் உடனடியாக 100 பேர்களுக்கு  பட்டா மாறுதல், முதியோர் உதவிதொகை உள்ளிட்ட  உதவிகள் வழங்கப்பட்டன.  

    இதில் ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் ராமச்சந்திரன், தாசில்தார் தங்கையா, மண்டல துணை தாசில்தார் மைக்கேல், தலைமையிடத்து  துணை தாசில்தார் கோமதி சங்கர், வருவாய் ஆய்வாளர் பாலசுந்தரம் உள்பட பலர் கொண்டனர்.

    Next Story
    ×