என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மணலி புதுநகரில் சரக்கு வேன் மோதி 3-ம் வகுப்பு மாணவி பலி
Byமாலை மலர்25 May 2022 8:46 AM GMT (Updated: 25 May 2022 8:46 AM GMT)
விபத்து நடந்ததும் சரக்குவேன் டிரைவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து மணலி புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடிராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருவொற்றியூர்:
மணலி புதுநகரை அடுத்த கவுண்டர் பாளையம் திருநிலை கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பா. பூம்பூம் மாட்டுக்காரர். இவருடைய மகள் சத்யா(வயது 8). அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் சிறுமி சத்யா வீட்டின் அருகே நின்று விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த சரக்கு வேனை டிரைவர் பின்புறமாக இயக்கினார்.
இதில் விளையாடிக்கொண்டிருந்த மாணவி சத்யா மீது சரக்குவேன் மோதியது. இதில் அவள் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினாள்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் மாணவி சத்யாவை மீட்டு பாடியநல்லூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மாணவி சத்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விபத்து நடந்ததும் சரக்குவேன் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து மணலி புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடிராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மணலி புதுநகரை அடுத்த கவுண்டர் பாளையம் திருநிலை கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பா. பூம்பூம் மாட்டுக்காரர். இவருடைய மகள் சத்யா(வயது 8). அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் சிறுமி சத்யா வீட்டின் அருகே நின்று விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த சரக்கு வேனை டிரைவர் பின்புறமாக இயக்கினார்.
இதில் விளையாடிக்கொண்டிருந்த மாணவி சத்யா மீது சரக்குவேன் மோதியது. இதில் அவள் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினாள்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் மாணவி சத்யாவை மீட்டு பாடியநல்லூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மாணவி சத்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விபத்து நடந்ததும் சரக்குவேன் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து மணலி புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடிராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X