என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் 210 பயனாளிகளுக்கு வேளாண் பொருட்கள்
Byமாலை மலர்24 May 2022 10:56 AM GMT (Updated: 24 May 2022 10:56 AM GMT)
2021-22 ன் கீழ் ரூ.227 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் தொடக்க விழா
காளப்பட்டி, மே.24-
தமிழக அரசின் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டம் 2021-22 ன் கீழ் ரூ.227 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில் வேளாண் வளர்ச்சி பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கொண்டையம் பாளையத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். நடராஜன் எம்.பி, எஸ்.எஸ்.குளம் தி.மு.க.ஒன்றிய செயலாளரும், அட்மா தலைவருமான சுரேஷ்குமார், கொண்டையம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார். தோட்டக்கலை துணை இயக்குனர் புவனேஸ்வரி வரவேற்றார். இதில் தோட்டக்கலைத்துறை, வேளாண்மை துறை, வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, பால்வ ளத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 210 பயனாளிகளுக்கு வீட்டுத் தோட்டத்திற்கு தேவையான 8 வகை விதைகள் மற்றும் 2 கிலோ மண்புழு உரம் 75 சதவீத மானியத்திலும், பயிர் ஊக்கத்தொகை 100 சதவீத மானியத்திலும் வழங்கப்பட்டது. மேலும் ரூ.53 ஆயிரத்து 625 மதிப்பில் பயனாளிகளுக்கு வேளாண் பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சர்க்கார் சாமகுளம் பேரூராட்சி தலைவர் கோமளவல்லி கந்தசாமி, சர்க்கார் சாமகுளம் பேரூராட்சி துணைத்தலைவர் மணி என்ற விஜயகுமார் மற்றும் அரசு அதிகாரிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X