search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கைது

    இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார்.
    கோவை, 
    கோவை கெம்பட்டி காலனி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 21). பெயிண்டர்.
     
     சம்பவத்தன்று இவர் கருவலூர் மாரியம்மன் கோவில் வீதி வழியாக தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த வாலிபர்கள் தினேஷ்குமார் பாக்கெட்டில் வைத்து இருந்த செல்போனை திருடி தப்பிச் சென்றனர்.
     இது குறித்து அவர் பெரியக்கடை வீதி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போனை பறித்து சென்ற கெம்பட்டி காலனி பாளையம் ேதாட்டத்ைத சேர்ந்த அங்குராஜ் (24), மணிகண்டன் (32) ஆகியோரை கைது செய்தனர்.
     பின்னர் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 
     
    அசாம் மாநிலத்தை சேர்தவர் பிரதீப் (25). மெக்கானிக்.
     இவர் வேலாண்டி பாளையத்தில் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள ஒர்க்‌ஷாப்பில் ெதாழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். 
    சம்பவத்தன்று இவர் ஒர்க்‌ஷாப் முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த வாலிபர் ஒருவர் பேசுவதற்கு செல்போன் வேண்டும் என கேட்டார். இதனையடுத்து பிரதீப் தனது செல்போனை கொடுத்தார். 
    ஆனால் அந்த வாலிபர் செல்போனை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார். 
     
    இது குறித்து பிரதீப் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போனை பறித்து சென்ற கோவில்மேட்டை சேர்ந்த தினேஷ்(21) என்பவரை கைது செய்தனர். 
    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.  

    Next Story
    ×