என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இலங்கை வாலிபரின் மண்டை உடைப்பு
காரமடை,
ஈரோடு பவானிசாகர் பகுதியில் உள்ள இலங்கைகள் முகாமை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 30). பெயிண்டிங் காண்டிராக்டர்.
இவர் கடந்த 2 வாரமாக காரமடை பகுதியில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் காரமடை கார் ஸ்டாண்ட் அருகே உள்ள நிழற்குடையில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் குடிபோதையில் வந்தார்.
அந்த வாலிபர் பிரகாஷ் அருகே வந்து தகாத வார்த்தைகளால் பேசிக் கொண்டிருந்ததார்.இதனால் பிரகாஷ் அவரை சத்தம்போட்டு அங்கிருந்து செல்லுமாறு கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர், அவரை என்னை திட்டுகிறாயா என கேட்டு அங்கிருந்த கல்லாலை எடுத்து பிரகாசின் மண்டையை உடைத்தார்.
பின்னர் கொலை மிரட்டல் விடுத்து சென்றார்.இதில் மண்டை உடைந்ததில் அவருக்கு ரத்தம் கொட்டியது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பிரகாஷ் காரமடை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவை கணபதியை சேர்ந்த கூலி தொழிலாளி சிவராமன் (வயது 24) என்பவர் பிரகாசை தாக்கியது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் சிவராமனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X