என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாகுபலி காட்டு யானையை வனத்திற்குள் விரட்ட போராடிய குட்டி நாய்
Byமாலை மலர்24 May 2022 10:25 AM GMT (Updated: 24 May 2022 10:25 AM GMT)
பாகுபலி யானை இரவு நேரங்களில் ஊருக்குள் சுற்றி திரிந்து வருகிறது.
காரமடை,
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் ஓராண்டுக்கு பின்னர் மீண்டும் பாகுபலி யானையின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
தற்போது சமயபுரம், கல்லார், குரும்பனூர், ஓடந்துறை உள்ளிட்ட மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிகிறது.
யானையின் நடமா–ட்டத்தை கண்காணிக்க வனத்து–றையினர் தொடர்ந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும், யானை குடியிருப்பு பகுதி–களிலேயே சுற்றி திரிகிறது.
சம்பவத்தன்று இரவு வனத்தை விட்டு வெளியேறிய பாகுபலி யானை சமயபுரம் பகுதியில் சாலையை கடந்து ஊருக்குள் நுழைந்தது. அப்போது அங்கு சுற்றி திரிந்த குட்டி நாய், யானையை பார்த்து குரைத்தது. மேலும் விடாமல் குரைத்து கொண்டே யானையை பின்னால் ஓடியது. நாய் குரைப்பதை கேட்டு அப்பகுதி மக்கள் விழித்து, வீட்டில் இருந்து ஜன்னல் வழியாக பார்த்தனர்.
அப்போது யானை சுற்றி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்களும் விரைந்து வந்தனர்.அந்த சமயம் நாய் குரைத்து கொண்டே, யானையின் பின்னால் ஓடியது. இதனால் ஆத்திரம் அடைந்த பாகுபலி யானை தனது பின்னால் ஓடி வந்த குட்டி நாயை பார்த்து பிளிறி விரட்ட முயன்றது.
ஆனால் நாயோ எந்தவித பயமும் இல்லாமல் மிகப்பெரிய யானை எதிர்த்து நின்றதுடன், அதனை வனத்திற்குள் விரட்டுவதிலேேய குறியாக இருந்தது.
இது அங்கு யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க வந்த வனத்துறையினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி திரியும் பாகுபலி யானையால் இப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X