search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    2 ஆண்டுகளுக்கு பிறகு 26-ந் தேதி ஜமாபந்தி தொடக்கம்

    கோவை மாவட்டத்தில் அந்தந்த தாலுகாஅலுவலகங்களில் நடக்கிறது
    கோவை, 
    கோவை மாவட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜமாபந்தி, அந்தந்த தாலுகாஅலுவலகங்களில் வருகிற 26-ந் தேதி முதல்  தொடங்குகிறது. 
     
    இது குறித்து மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்  கூறியிருப்பதாவது:--
    சூலுாரில் எனது  தலைமையில் 26-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை ஜமாபந்தி நடக்கிறது. இதே போல அன்னூரில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தலைமையில் 26 -ந் தேதி முதல் 31-ந் தேதி வரையும், பொள்ளாச்சியில் சப்-கலெக்டர் தலைமையில் 26-ந் ேததி முதல் ஜூன் 2-ந் தேதி வரையும், வால்பாறையில் 26-ந் தேதி ஒரு நாளும் நடக்கிறது.
     
    கிணத்துக்கடவில் கலால் துணை கமிஷனர் தலைமையில் 26-ந் தேதி முதல் 31-ந் வரையும், மேட்டுப் பாளையத்தில் வடக்கு ஆர்.டி.ஓ., தலைமையில் 26-ந்   தேதி முதல் 1-ந் தேதி வரையிலும் ஜமாபந்தி நடக்கிறது.
    பேரூரில் தெற்கு ஆர்.டி.ஓ., தலைமையிலும், மதுக்கரையில் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தலைமையிலும், வடக்கு தாலுகாவில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் தலைமையிலும், கோவை தெற்கில் ஆதிதிராவிடர் நல அலுவலர் தலைமையிலும், ஆனைமலையில் தாட்கோ மேலாளர் தலைமையிலும் ஜமாபந்தி நடக்கிறது.
     
    ஜமாபந்தி நடக்கும் அலுவலகங்களில், பட்டா மாறுதல், உட்பிரிவு செய்தல், நில எல்லை அளத்தல், முதியோர் உதவித்தொகை, இலவச பட்டா, குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கை தொடர்பாக, அரசு வேலை நாளில் காலை 10 மணி முதல் பொதுமக்கள் மனு அளிக்கலாம்.
    இவ்வாறு கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி உள்ளார்.

    Next Story
    ×