என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி சிறைபிடிப்பு
    X
    லாரி சிறைபிடிப்பு

    கேரளாவுக்கு மாடுகளை ஏற்றி சென்ற லாரி சிறைபிடிப்பு

    டிரைவருக்கு ரூ. 2200 அபராதமும் விதித்தனர்.
    நெகமம்,  

    தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது.  மாட்டு வியாபாரிகள் குறைந்த விலையில் மாடுகளை வாங்கி தமிழகத்தின் அருகில் உள்ள அண்டை மாநிலமான கேரளாவுக்கு இறைச்சிக்காக மாடுகளை லாரி மற்றும் டாரஸ் லாரி மூலம் கொண்டு செல்கின்றனர்.

    இதை தடுக்கும் விதமாக சிவசேனா கட்சியினர் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் மிளகாய் அரைத்து வழிபாடு செய்தனர். இந்த நிலையில் திருப்பூர்-பொள்ளாச்சி சாலை நெகமம் நால் ரோடு பகுதியில்  வேலூரில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடி பகுதிக்கு டாரஸ் லாரியில் மாடுகள் கொண்டு செல்லப்படுவதாக தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சிவசேனா கட்சியினர் விரைந்து சென்று அந்த லாரியை மறித்து தடுத்து நிறுத்தினர். அப்போது லாரியில் இறைச்சிக்காக 40  மாடுகளை லாரியில் ஏற்றி வந்தது தெரியவந்தது.பின்னர் சிவசேனா கட்சியின் இளைஞரணி மாநில தலைவர் திருமுருக தினேஷ் நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் விரைந்து வந்து மாடு ஏற்றி வந்த லாரியை சோதனை செய்தனர்.லாரியில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்தது, லாரியை அதிவேகமாக ஓட்டி வந்தது, டிரைவர் யூனிபார்ம் போடாதது, மாடுகளுக்கு உரிய தீவனம் மற்றும் தண்ணீர் வசதி ஏற்பாடு செய்யாமல் இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் டிரைவருக்கு ரூ. 2200 அபராதமும் விதித்தனர்.
    Next Story
    ×