search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    பொக்லைன் டிரைவர் கைது

    கமுதியில் சிறுமி பலியான விபத்தில் பொக்லைன் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பவுண்டு தெருவை சேர்ந்தவர் வெங்கடசுப்ர மணியன். இவரது மகள் சாய் தர்ஷினி (வயது 13). 

    இவர் நேற்று பால் வாங்க சைக்கிளில் வெளியே சென்றார். வடக்கு முதுகு ளத்தூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது அங்கு ஒரு பழைய வீட்டை இடித்துக் கொண்டிருந்த பொக்லைன் எந்திரம் எதிர்பாராத விதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சாய் தர்ஷினி ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். 

    விபத்து ஏற்படுத்திய பொக்லைன் எந்திர டிரைவர் விருதுநகர் மாவட்டம் மாணிக்கம் புரத்தைச் சேர்ந்த கார்த்திக் ராஜா தலைமறைவானார். 

    இந்த சம்பவம் தொடர்பாக கமுதி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் தலைமறைவான டிரைவர் கார்த்திக் ராஜாவை தேடிவந்த நிலையில் நேற்று இரவு போலீசார் அவரை கைது செய்தனர்.
    Next Story
    ×