search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கோவை அருகே 2 சிறுமிகளுக்கு அடுத்தடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்

    கோவை அருகே 2 சிறுமிகளுக்கு அடுத்தடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    கோவை:

    கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் நஜ்முல் இஸ்லாம்(வயது23). இவரது வீட்டின் அருகே 9 வயது சிறுமி வசித்து வருகிறார்.

    நேற்று மதியம் சிறுமி தனது தோழிகளுடன் அந்த பகுதியில் விளையாடினார். அப்போது தண்ணீர் தாகம் எடுக்கவே சிறுமி, நஜ்முல் இஸ்லாமின் வீட்டிற்கு சென்று குடிக்க தண்ணீர் கேட்டார்.

    அவரும் சிறுமியை வீட்டிற்கு அழைத்து குடிக்க தண்ணீர் கொடுத்தார். சிறிது நேரத்தில் சிறுமியை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்தார். மேலும் சிறுமியின் ஆடைகளை களைந்து அவரிடம் தவறாக நடக்க முயன்றார்.

    இதனை சற்றும் எதிர்பாராத சிறுமி, சத்தம் போட்டார். சிறுமியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது வாலிபர் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றது தெரியவந்தது.

    இதையடுத்து வாலிபரை பிடித்து இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் உன்னை போலீசில் பிடித்து கொடுத்து விடுவோம் என எச்சரித்து விட்டு சிறுமியை அழைத்து சென்றனர்.

    இருப்பினும் திருந்தாத அந்த வாலிபர், மாலை 5 மணியளவில் தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 5 வயதுடைய மற்றொரு சிறுமியை வீட்டையொட்டிய காட்டு பகுதிக்குள் தூக்கி சென்று பலாத்காரம் செய்ய முயன்றார். சிறுமி சத்தம் போடவே அவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

    இதுகுறித்து 2 சிறுமிகளும் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சியான அவர்கள் உடனடியாக சம்பவம் குறித்து, பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் வாலிபர், 2 சிறுமிகளையும் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். போலீசார் தேடுவதை அறிந்த அவர் தலைமறைவானார். தொடர்ந்து நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் வாலிபர் அந்த பகுதியிலேயே பதுங்கியிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் விரைந்து சென்று, நஜ்முல் இஸ்லாமை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×