என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஜோலார்பேட்டையில் சென்னை ரெயிலில் 9 வயது சிறுமியிடம் சில்மிஷம்- முதியவர் கைது
Byமாலை மலர்16 May 2022 7:09 AM GMT (Updated: 16 May 2022 7:09 AM GMT)
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே ரெயில் சென்றபோது அதே பெட்டியில் பயணம் செய்த முதியவர் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.
ஜோலார்பேட்டை:
சென்னையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்கள் 9 வயது மகளுடன், ஆந்திராவுக்கு சென்றுவிட்டு சென்னைக்கு ரெயிலில் வந்து கொண்டிருந்தனர்.
ரெயில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே சென்றபோது அதே பெட்டியில் பயணம் செய்த முதியவர் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அதே பெட்டியில் பயணம் செய்த டிக்கெட் பரிசோதகரிடம் புகார் செய்தனர்.
அதைத்தொடர்ந்து முதியவரை பிடித்து காட்பாடி ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து புகார் கொடுத்தனர். சம்பவம் நடைபெற்ற இடம் ஜோலார்பேட்டை பகுதி என்பதால் அந்த முதியவரை ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர். ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் விசாரணை செய்தனர்.
விசாரணையில் சிறுமியிடம் சில்மிஷம் செய்தவர் சென்னை வடபழனி பூக்கார தெருவை சேர்ந்த சாமுவேல் பெட்ரோமாண்டஸ் (வயது 65) என்பது தெரியவந்தது. ரெயில்வே போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து முதியவரை கைது செய்தனர்.
சென்னையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்கள் 9 வயது மகளுடன், ஆந்திராவுக்கு சென்றுவிட்டு சென்னைக்கு ரெயிலில் வந்து கொண்டிருந்தனர்.
ரெயில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே சென்றபோது அதே பெட்டியில் பயணம் செய்த முதியவர் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அதே பெட்டியில் பயணம் செய்த டிக்கெட் பரிசோதகரிடம் புகார் செய்தனர்.
அதைத்தொடர்ந்து முதியவரை பிடித்து காட்பாடி ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து புகார் கொடுத்தனர். சம்பவம் நடைபெற்ற இடம் ஜோலார்பேட்டை பகுதி என்பதால் அந்த முதியவரை ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர். ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் விசாரணை செய்தனர்.
விசாரணையில் சிறுமியிடம் சில்மிஷம் செய்தவர் சென்னை வடபழனி பூக்கார தெருவை சேர்ந்த சாமுவேல் பெட்ரோமாண்டஸ் (வயது 65) என்பது தெரியவந்தது. ரெயில்வே போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து முதியவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X