search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    ஜோலார்பேட்டையில் சென்னை ரெயிலில் 9 வயது சிறுமியிடம் சில்மிஷம்- முதியவர் கைது

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே ரெயில் சென்றபோது அதே பெட்டியில் பயணம் செய்த முதியவர் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.
    ஜோலார்பேட்டை:

    சென்னையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்கள் 9 வயது மகளுடன், ஆந்திராவுக்கு சென்றுவிட்டு சென்னைக்கு ரெயிலில் வந்து கொண்டிருந்தனர்.

    ரெயில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே சென்றபோது அதே பெட்டியில் பயணம் செய்த முதியவர் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அதே பெட்டியில் பயணம் செய்த டிக்கெட் பரிசோதகரிடம் புகார் செய்தனர்.

    அதைத்தொடர்ந்து முதியவரை பிடித்து காட்பாடி ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து புகார் கொடுத்தனர். சம்பவம் நடைபெற்ற இடம் ஜோலார்பேட்டை பகுதி என்பதால் அந்த முதியவரை ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர். ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் விசாரணை செய்தனர்.

    விசாரணையில் சிறுமியிடம் சில்மிஷம் செய்தவர் சென்னை வடபழனி பூக்கார தெருவை சேர்ந்த சாமுவேல் பெட்ரோமாண்டஸ் (வயது 65) என்பது தெரியவந்தது. ரெயில்வே போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து முதியவரை கைது செய்தனர்.
    Next Story
    ×