search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கொளத்தூரில் சேலையால் கழுத்தை இறுக்கி தொழிலாளி தற்கொலை- மனைவி பிரிந்ததால் சோகம்

    கொளத்தூரில் மனைவி பிரிந்த சோகத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொளத்தூர்:

    கொளத்தூர், எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டிஸ் (வயது26). கூலித்தொழிலாளி. இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் ஆனது.

    கருத்து வேறுபாடு காரணமாக ஜஸ்டிசை அவரது மனைவிபிரிந்து சென்று விட்டார். இதனால் ஜஸ்டிஸ் மனவருத்தத்தில் இருந்தார்.

    இந்தநிலையில் வீட்டில் இருந்த ஜஸ்டிஸ் திடீரென தனது கழுத்தில் சேலையை சுற்றி தனக்கு தானே இறுக்கினார்.இதில் அவர் மயங்கி விழுந்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாய், உயிருக்கு போராடிய மகன் ஜஸ்டிசை மீட்டு பெரியார் நகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஜஸ்டிஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தகவல் அறிந்ததும் ராஜமங்கலம் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×