என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சத்குருவின் 'மண் காப்போம்' இயக்கத்திற்கு உலக முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் ஆதரவு
Byமாலை மலர்14 May 2022 1:39 PM GMT (Updated: 14 May 2022 1:39 PM GMT)
மிகவும் செல்வாக்கு மிக்க சர்வதேச அரசு சாரா இஸ்லாமிய அமைப்புகளில் ஒன்றான உலக முஸ்லீம் லீக் 'மண் காப்போம்' இயக்கத்திற்கு தனது ஆதரவை உறுதியளித்தது.
மண் வளத்தை பாதுகாப்பதற்காக 100 நாட்களில் 30,000 கி.மீ. மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள சத்குரு, கடந்த மார்ச் மாதத்தில் லண்டனில் இருந்து பயணத்தை துவங்கினார். ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தமிழகம் வந்துகொண்டிருக்கிறார். தற்போது 50 நாட்களைக் கடந்து தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் பயணித்து வருகிறார். மண்ணைக் காப்பாற்றுவதற்கான அவசரக் கொள்கை சார்ந்த நடவடிக்கைகளுக்கு உலகளாவிய ஒருமித்த கருத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் நகரில், உலக முஸ்லீம் லீக்கின் பொதுச் செயலாளர் மேதகு டாக்டர் அல்-இசா அவர்கள் ஈஷா நிறுவனர் சத்குரு அவர்களை சந்திக்கும்போது, "நாங்கள் ஏற்கனவே உங்களை மிகவும் விரும்பினோம். உங்களைப் பார்ப்பதற்கு முன்பே நாங்கள் உங்களை நேசித்தோம், உங்களைப் பார்த்தவுடன் நாங்கள் இன்னும் அதிகமாகக் நேசிக்கிறோம்,” என்று கூறினார்.
"முஸ்லிம் உலகத்தை மண்ணுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம், என்னை ஆதரிக்காமல், மண்ணைப் பற்றி பேசுங்கள், மண்ணை ஆதரியுங்கள்" என்று சத்குரு பொதுச்செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்தார். “நாம் இனம், மதம், சாதி, மதம் என பல வழிகளில் ஒருவருக்கொருவர் வேறுபாடுகளைக் கண்டறிந்துள்ளோம். சில பொதுவான காரணிகள் அல்லது நம் அனைவருக்கும் பொதுவான அடிப்படையைக் கண்டறிவது மிகவும் முக்கியமானதாகிவிட்டது. மண் அப்படிப்பட்ட ஒரு விஷயம்,” என்ற சத்குரு, "மண் என்பது சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல, மனிதகுலத்தை ஒன்றிணைக்கும் ஒரு வழியாகும்" என்றும் அவர் கூறினார்.
"உலக முஸ்லிம் லீக்கைப் பொறுத்தவரை, உங்களது நோக்கங்களை ஆதரிப்பதற்காக, உங்களுக்கு எந்த வகையிலும் உதவ நாங்கள் முற்றிலும் தயாராக இருக்கிறோம்," என்று டாக்டர் அல்-இசா பதிலளித்தார்.
செக்ரட்டரி ஜெனரல் சத்குருவை அரவணைத்து, 'மண் காப்போம்' என்ற பதாகையுடன் புகைப்படத்திற்கு நிற்பதற்கு முன், "உண்மையான தாக்கத்துடன் நடைமுறை மற்றும் தீவிரமான முயற்சியின் மூலம் அதை நிலத்தில் நடக்கச் செய்வோம்" என்று அறிவித்தார்.
சத்குரு, டாக்டர் அல்-இசாவையும் தன்னை சந்திக்க வருமாறு அழைத்தார். "இப்போது நீங்கள் உங்கள் அன்பை வெளிப்படுத்தினீர்கள், நீங்கள் என் வீட்டிற்கு வர வேண்டும்," என்று அவர் கூறினார்.
பின்னர், சத்குரு முஸ்லீம் வேர்ல்ட் லீக்குடனான தனது வெற்றிகரமான சந்திப்பு குறித்து இரண்டு ட்வீட்களை வெளியிட்டார்: “#MuslimWorldLeague #SaveSoilஐ ஆதரித்தது மிக்க மகிழ்ச்சி. நிலையான சுற்றுச்சூழல் தீர்வுகள் மற்றும் அதன் மக்களின் நீண்ட கால பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கான அர்ப்பணிப்புக்கு இப்பகுதி ஒரு பிரகாசமான உதாரணமாக இருக்கட்டும். #SaveSoil."
#MuslimWorldLeague-ன் உணர்ச்சி மிக்க ஆதரவைப் பெற்றிருப்பது அற்புதமானது. மனித நல்வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் வளமான மண்ணால் வளப்படுத்தப்படுகிறது. மண் புத்துயிர் பெறுவதில் ஒரே கவனம் செலுத்தி ஒரே மனித இனமாக ஒன்றிணைவதற்கான நேரம். #SaveSoil. நாம் இதனை நிகழச்செய்வோம்.
"தனது பயணத்தின் 52-வது நாளில், சவூதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் 'மண் காப்போம்' நிகழ்வை நடத்தியது, இதில் பொறுப்பாளர் என். ராம் பிரசாத் கலந்து கொண்டார். சவூதி அரேபியாவின் சுற்றுச்சூழல் அமைச்சரும் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தார்."
சத்குரு தனது பயணத்தின் போது மத்திய கிழக்கு பகுதிகளான பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கும் செல்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X