என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தூத்துக்குடியில் மளிகை கடையில் பணம்-செல்போன் கொள்ளை
Byமாலை மலர்10 May 2022 9:29 AM GMT (Updated: 10 May 2022 9:29 AM GMT)
தூத்துக்குடியில் உள்ள ஒரு மளிகை கடையில் பணம் மற்றும் செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 50). இவர் சுப்பையா முதலியார் தெரு மெயின்ரோட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு தூங்க சென்றார்.
இன்று காலை வழக்கம் போல அவர் கடையை திறக்க சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பாலமுருகன் உள்ளே சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ. 10 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 2 செல்போன்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.
நள்ளிரவில் மர்மநபர்கள் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் தென்பாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 50). இவர் சுப்பையா முதலியார் தெரு மெயின்ரோட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு தூங்க சென்றார்.
இன்று காலை வழக்கம் போல அவர் கடையை திறக்க சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பாலமுருகன் உள்ளே சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ. 10 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 2 செல்போன்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.
நள்ளிரவில் மர்மநபர்கள் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் தென்பாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X