என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தூத்துக்குடி வாலிபர் கொலையில் சிறுவன் உள்பட 5 பேர் கைது
Byமாலை மலர்8 May 2022 9:55 AM GMT (Updated: 8 May 2022 9:55 AM GMT)
தூத்துக்குடி ஜார்ஜ்ரோட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான பாழடைந்த கட்டிடத்தின் மாடியில் வாலிபர் ஒருவர் நேற்று தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது42).
கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி பிரிந்து சென்று விட்டதால் சகோதரி வீட்டில் பிரபு வசித்து வந்தார்.
இந்நிலையில் தூத்துக்குடி ஜார்ஜ்ரோட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான பாழடைந்த கட்டிடத்தின் மாடியில் பிரபு நேற்று தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்தனர்.
இதில் சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது. பிரபு மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரபு தனது நண்பர்களான தூத்துக்குடியை சேர்ந்த செல்வ சதீஸ் (23), இசக்கி ராஜா (23), அருண் என்ற ஜெபக்குமார் (20), வசந்த் (20) மற்றும் ஒரு சிறுவன் ஆகியோருடன் தூத்துக்குடியில் உள்ள அரசு கட்டிடத்தில் ஒன்றாக மது குடித்துள்ளார்.
அப்போது பிரபு இனிமேல் தான் திருந்தி வாழப்போவதாக நண்பர்களுடன் கூறி உள்ளார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் தலையை துண்டித்து பிரபுவை கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து கொலையில் தொடர்புடைய சிறுவனை நேற்று போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மற்ற 4 பேரையும் இன்று அதிகாலை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது42).
கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி பிரிந்து சென்று விட்டதால் சகோதரி வீட்டில் பிரபு வசித்து வந்தார்.
இந்நிலையில் தூத்துக்குடி ஜார்ஜ்ரோட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான பாழடைந்த கட்டிடத்தின் மாடியில் பிரபு நேற்று தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்தனர்.
இதில் சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது. பிரபு மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரபு தனது நண்பர்களான தூத்துக்குடியை சேர்ந்த செல்வ சதீஸ் (23), இசக்கி ராஜா (23), அருண் என்ற ஜெபக்குமார் (20), வசந்த் (20) மற்றும் ஒரு சிறுவன் ஆகியோருடன் தூத்துக்குடியில் உள்ள அரசு கட்டிடத்தில் ஒன்றாக மது குடித்துள்ளார்.
அப்போது பிரபு இனிமேல் தான் திருந்தி வாழப்போவதாக நண்பர்களுடன் கூறி உள்ளார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் தலையை துண்டித்து பிரபுவை கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து கொலையில் தொடர்புடைய சிறுவனை நேற்று போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மற்ற 4 பேரையும் இன்று அதிகாலை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X