என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருவையாறில் சாக்கடை கால்வாயின்மீ து ஆவின் பால் பூத்
Byமாலை மலர்7 May 2022 10:17 AM GMT (Updated: 7 May 2022 10:17 AM GMT)
திருவையாறில் சுகாதார சீர்கேட்டோடு திறந்து கிடக்கும் சாக்கடை கால்வாயின் மீது ஆவின் பால் பூத் திறக்கும் முடிவால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருவையாறு:
திருவையாறு பஸ் ஸ்டாண்டில் உடலுக்கு சத்தான, சுகாதாரமான பால் மற்றும் பால் பொருட்களை விற்கும் ஆவின் பால் பூத் புதிதாக நிறுவப்பட்டு வண்ணப் பூச்சு வேலைகள் நடக்கிறது.
சுத்தம், சுகாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஆவின் நிறுவன பால் பூத்கள் இயங்குவதாக பொதுமக்கள் நம்பி, ஆவின் பால் பூத்களைத் தேடிச் சென்று, ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை வாங்குகிறார்கள். ஆனால், தற்போது திருவையாறு பேருந்து நிலையத்தில் சிறுநீர்க் கழிப்பிடத்துக்கு அருகாமையிலும், திறந்த நிலை சாக்கடைக் கால்வாயின் மேலும் ஆவின் பால் பூத் நிறுவப்பட்டுள்ளது.
இந்த சாக்கடையின் மேலேயும், அருகிலேயும் அமைந்துள்ள ஆவின் பால் பூத்தில் விற்கப்படும் பால், டீ, காபி மற்றும் தின்பண்டங்களை பயணிகளும், பொதுமக்களும் வாங்கி சாப்பிடுவதால் உடல்நலக் கேடுகள் உருவாக வாய்ப்புள்ளது, மேலும், தற்போது ஆவின் பால் பூத் அமைந்துள்ள பகுதியில் தான் தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் பஸ்ஸ்டாண்டுக்குள் சென்று திரும்பி நின்று புறப்படுகிறது. இந்த பால் பூத்தினால் பஸ்ஸ்டாண்டுக்குள் பஸ்கள் சென்று திரும்புவதற்கு இடையூறாகவும் அமைய வாய்ப்புள்ளது.
எனவே, இந்த ஆவின் பால் பூத்தினை திருவையாறு பஸ்ஸ்டாண்டிலேயே சுகாதாரமான மற்றும் பஸ்கள் நிற்பதற்கு இடையூறு இல்லாமலும் வேறு இடத்தில் மாற்றி அமைத்திட ஆவன செய்யுமாறு பேரூராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினருக்கு பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X