என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குடிபோதையில் வாகனங்கள் ஓட்டக்கூடாது- போலீஸ் அதிகாரி அறிவுரை
Byமாலை மலர்7 May 2022 7:40 AM GMT (Updated: 7 May 2022 7:40 AM GMT)
இந்தியா முழுவதும் நடந்த சாலை விபத்துகளில் தலைக்கவசம் அணியாமல் சென்றவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் இறந்துள்ளனர் என்று விபத்து குறித்து ஆய்வு மூலம் தெரியவந்துள்ளதாக துணை போலீஸ் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டையில் போக்குவரத்து காவல்துறை சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் குமார் முன்னிலை வகித்தார். துணை போலீஸ் கண்காணிப்பாளர் சாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது. இந்தியா முழுவதும் நடந்த சாலை விபத்துகளில் தலைக்கவசம் அணியாமல் சென்றவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் இறந்துள்ளனர் என்று விபத்து குறித்து ஆய்வு மூலம் தெரிகிறது.
இதனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். தலைக்கவசம் உயிர்க்கவசமாகும். தலைக்கவசம் அணிந்து சென்றால் அபராதத்தை தவிர்க்கலாம். இருசக்கர வாகனத்தில் ஓட்டுநர் மற்றும் உடன் பயணிப்பவர் தலைக்கவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும். செல்போன் பேசிக்கொண்டும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம்.
காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். சாலை விதிகளை மதித்து விபத்துக்களை தடுக்க வேண்டும். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளி, பிரதாபன் மற்றும் பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ஊத்துக்கோட்டையில் போக்குவரத்து காவல்துறை சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் குமார் முன்னிலை வகித்தார். துணை போலீஸ் கண்காணிப்பாளர் சாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது. இந்தியா முழுவதும் நடந்த சாலை விபத்துகளில் தலைக்கவசம் அணியாமல் சென்றவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் இறந்துள்ளனர் என்று விபத்து குறித்து ஆய்வு மூலம் தெரிகிறது.
இதனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். தலைக்கவசம் உயிர்க்கவசமாகும். தலைக்கவசம் அணிந்து சென்றால் அபராதத்தை தவிர்க்கலாம். இருசக்கர வாகனத்தில் ஓட்டுநர் மற்றும் உடன் பயணிப்பவர் தலைக்கவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும். செல்போன் பேசிக்கொண்டும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம்.
காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். சாலை விதிகளை மதித்து விபத்துக்களை தடுக்க வேண்டும். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளி, பிரதாபன் மற்றும் பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X