என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திண்டுக்கல் அருகே புதுப்பெண்ணை காரில் கடத்திய 2 பேர் கைது
Byமாலை மலர்7 May 2022 5:49 AM GMT (Updated: 7 May 2022 5:49 AM GMT)
திண்டுக்கல் அருகே புதுப்பெண்ணை காரில் கடத்தியது தொடர்பாக 2 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே குஜிலியம்பாறை டி.கூடலூர் பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் மகள் லலிதா(23). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த கார்த்தி(24) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நாளை(8ந்தேதி) திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் லலிதாவின் அக்கா நந்தினி மற்றும் அவரது கணவர் மணிகண்டன் ஆகியோர் லலிதாவை உறவினரான வினோத்துக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
இதனைதொடர்ந்து மணப்பெண் லலிதாவை மணிகண்டன் உள்பட 5 பேர் காரில் கடத்தி சென்றனர். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் குஜிலியம்பாறை சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதில் லலிதா லாலாபேட்டையில் இருப்பது தெரியவந்தது. போலீசார் விரைந்து சென்று புதுப்பெண்ணை மீட்டனர். மேலும் இதுதொடர்பாக மணிகண்டன் மற்றும் கார் டிரைவர் முருகவேல் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே குஜிலியம்பாறை டி.கூடலூர் பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் மகள் லலிதா(23). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த கார்த்தி(24) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நாளை(8ந்தேதி) திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் லலிதாவின் அக்கா நந்தினி மற்றும் அவரது கணவர் மணிகண்டன் ஆகியோர் லலிதாவை உறவினரான வினோத்துக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
இதனைதொடர்ந்து மணப்பெண் லலிதாவை மணிகண்டன் உள்பட 5 பேர் காரில் கடத்தி சென்றனர். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் குஜிலியம்பாறை சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதில் லலிதா லாலாபேட்டையில் இருப்பது தெரியவந்தது. போலீசார் விரைந்து சென்று புதுப்பெண்ணை மீட்டனர். மேலும் இதுதொடர்பாக மணிகண்டன் மற்றும் கார் டிரைவர் முருகவேல் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X