என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தாராபுரம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தம் வெறிநாய்கள்
Byமாலை மலர்6 May 2022 7:19 AM GMT (Updated: 6 May 2022 7:19 AM GMT)
இறைச்சி கழிவுகளை உண்பதற்கு தினமும் ஏராளமான நாய்கள் முகாமிட்டுள்ளன.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட கொழிஞ்சிவாடி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் இச்சுற்றுவட்டார பகுதிக்கு அருகாமையில் உள்ள இறைச்சி கடைகளில் உள்ள இறைச்சி கழிவுகள் கொழிஞ்சிப்பாடி பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது.
இந்த இறைச்சி கழிவுகளை உண்பதற்கு தினமும் ஏராளமான நாய்கள் இங்கேயே முகாமிட்டுள்ளன. இதனிடையே அந்த இறைச்சிகளை உண்பதற்காக வரும் நாய்கள் அவ்வழியே செல்பவர்களை கடித்து வருகிறது.
இதில் மனோகர், சதீஷ்குமார், ரகுநாதன், சுதாகர், ரேவதி உட்பட 10 க்கும் மேற்பட்டோரை வெறி நாய்கள் கடித்ததில் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே பாதிக்கப்பட்டவர்கள் இப்பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X