search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தாராபுரம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தம் வெறிநாய்கள்

    இறைச்சி கழிவுகளை உண்பதற்கு தினமும் ஏராளமான நாய்கள் முகாமிட்டுள்ளன.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட கொழிஞ்சிவாடி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் இச்சுற்றுவட்டார பகுதிக்கு அருகாமையில் உள்ள இறைச்சி கடைகளில் உள்ள இறைச்சி கழிவுகள் கொழிஞ்சிப்பாடி பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது.

    இந்த இறைச்சி கழிவுகளை உண்பதற்கு தினமும் ஏராளமான நாய்கள் இங்கேயே முகாமிட்டுள்ளன. இதனிடையே அந்த இறைச்சிகளை உண்பதற்காக வரும் நாய்கள் அவ்வழியே செல்பவர்களை கடித்து வருகிறது.

    இதில் மனோகர், சதீஷ்குமார், ரகுநாதன், சுதாகர், ரேவதி உட்பட 10 க்கும் மேற்பட்டோரை வெறி நாய்கள் கடித்ததில் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இதனிடையே பாதிக்கப்பட்டவர்கள் இப்பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
    Next Story
    ×