என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தொழிலாளர்களை காப்பாற்றிய தீயணைப்பு வீரருக்கு முதல்வர் பதக்கம்
Byமாலை மலர்6 May 2022 6:44 AM GMT (Updated: 6 May 2022 6:44 AM GMT)
தன் உயிரை துச்சமாக நினைத்து தொட்டிக்குள் இறங்கிய பாண்டீஸ்வரனை அனைவரும் பாராட்டினர்.
திருப்பூர்:
திருப்பூர் பல்லடம் ரோடு வித்யாலயா பகுதி கொத்துக்காடு தோட்டத்தில் தனியார் சாய ஆலை உள்ளது. கடந்த நவம்பர் 14-ந்தேதி இந்த ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் கழிவு நீர் தொட்டிக்குள் சிக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்பு படை வீரர்களில், பாண்டீஸ்வரன் என்பவர் விஷவாயு கசிந்த நிலையிலும் துரிதமாக செயல்பட்டு 5 பேரையும் மீட்டார்.
எனினும் 3 பேர் இறந்து விட்டனர்.தன் உயிரை துச்சமாக நினைத்து தொட்டிக்குள் இறங்கிய அந்த வீரரை அனைவரும் பாராட்டினர். இந்நிலையில் சிறப்பாக பணியாற்றிய தீயணைப்பு வீரர்கள் 5 பேருக்கு முதல்வர் பதக்கம் வழங்கப்பட உள்ளது. அவர்களில் ஒருவராக பாண்டீஸ்வரன் உள்ளார். அவரை தீயணைப்பு துறை அதிகாரிகள், சக வீரர்கள் வாழ்த்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X