என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆண்டகளூர்கேட்டில் அ.தி.மு.க. டிஜிட்டல் போர்டு கிழிப்பு
Byமாலை மலர்5 May 2022 8:39 AM GMT (Updated: 5 May 2022 8:39 AM GMT)
ஆண்டகளூர்கேட்டில் அ.தி.மு.க. டிஜிட்டல் போர்டு கிழிக்கப்பட்டது.
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர் கேட்டில் உள்ள ராசிபுரம்-திருச்செங்கோடு ரோடு பஸ் நிறுத்தம் பகுதியின் சாலையோரத்தில் ராசிபுரம் ஒன்றிய அ,தி,மு,க, சார்பில் டிஜிட்டல் போர்டு வைத்திருந்தனர்.
அதை மர்மநபர்கள் யாரோ கிழித்து விட்டனர். இது அ.தி.மு.க.வினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வேம்பு சேகரன் ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரில் பிளக்ஸ் கிழித்த மர்ம நபர்கள் பற்றி அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள ஆண்டகளூர்கேட் பகுதியில் பேனர் கிழிக்கப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X