என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இன்று வணிகர் தினவிழா: கோயம்பேடு மார்க்கெட்டில் 3 ஆயிரம் கடைகள் அடைப்பு
Byமாலை மலர்5 May 2022 6:31 AM GMT (Updated: 5 May 2022 6:31 AM GMT)
இன்று நள்ளிரவு முதல் கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள கடைகள் அனைத்தும் வழக்கம் போல திறக்கப்பட்டு விற்பனை நடைபெறும் என்று மொத்த வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
போரூர்:
வணிகர் தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மளிகை, காய்கறி சூப்பர் மார்க்கெட், ஓட்டல்கள் உள்ளிட்ட பெரும்பாலான கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளன.
காய்கறி, பழம், பூ மற்றும் மளிகை மொத்த மற்றும் சில்லரை விற்பனை நடைபெற்று வரும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை விடப்படும் என அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.
அதன்படி இன்று கோயம்பேடு காய்கறி மற்றும் பழ மார்க்கெட்டில் உள்ள மொத்த விற்பனை நடைபெறும் சுமார் 3 ஆயிரம் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டு உள்ளது. மளிகை மார்க்கெட்டிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
மொத்த விற்பனை கடைகள் விடுமுறை என்பதால் இன்று காய்கறி, பழம் மற்றும் மளிகை பொருட்கள் ஏதும் விற்பனைக்கு வரவில்லை.
காய்கறி, பழம் மற்றும் மளிகை மார்க்கெட்டில் 400 சில்லரை விற்பனை கடைகள் மட்டுமே இன்று திறக்கப்பட்டு இருந்தன. எனினும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பொருட்கள் வாங்க சில்லரை வியாபாரிகள், பொதுமக்கள் வரவில்லை. இதன் காரணமாக மார்க்கெட் வளாகம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.
பூ மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு வழக்கம் போல விற்பனை நடைபெற்று வருகிறது.
இன்று நள்ளிரவு முதல் கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள கடைகள் அனைத்தும் வழக்கம் போல திறக்கப்பட்டு விற்பனை நடைபெறும் என்று மொத்த வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
வணிகர் தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மளிகை, காய்கறி சூப்பர் மார்க்கெட், ஓட்டல்கள் உள்ளிட்ட பெரும்பாலான கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளன.
காய்கறி, பழம், பூ மற்றும் மளிகை மொத்த மற்றும் சில்லரை விற்பனை நடைபெற்று வரும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை விடப்படும் என அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.
அதன்படி இன்று கோயம்பேடு காய்கறி மற்றும் பழ மார்க்கெட்டில் உள்ள மொத்த விற்பனை நடைபெறும் சுமார் 3 ஆயிரம் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டு உள்ளது. மளிகை மார்க்கெட்டிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
மொத்த விற்பனை கடைகள் விடுமுறை என்பதால் இன்று காய்கறி, பழம் மற்றும் மளிகை பொருட்கள் ஏதும் விற்பனைக்கு வரவில்லை.
காய்கறி, பழம் மற்றும் மளிகை மார்க்கெட்டில் 400 சில்லரை விற்பனை கடைகள் மட்டுமே இன்று திறக்கப்பட்டு இருந்தன. எனினும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பொருட்கள் வாங்க சில்லரை வியாபாரிகள், பொதுமக்கள் வரவில்லை. இதன் காரணமாக மார்க்கெட் வளாகம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.
பூ மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு வழக்கம் போல விற்பனை நடைபெற்று வருகிறது.
இன்று நள்ளிரவு முதல் கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள கடைகள் அனைத்தும் வழக்கம் போல திறக்கப்பட்டு விற்பனை நடைபெறும் என்று மொத்த வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X