search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருப்பூரில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் சிறையில் அடைப்பு

    திருமணமான தகவலை மறைத்து ஆசை வார்த்தைகள் கூறி அந்த சிறுமியை கர்ப்பமாக்கியுள்ளார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மங்கலம் சாலை பிரிவு பகுதியைச் சேர்ந்த முகமது ஆசிப் என்பவரின் மகன் ரியாஸ் (வயது 23). பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவேதிருமணம் முடிந்து இரண்டு குழந்தையும் உள்ளது. 

    இந்த நிலையில் இவர் 16வயது சிறுமியிடம் தனக்கு திருமணமான தகவலை மறைத்து ஆசை வார்த்தைகள் கூறி அந்த சிறுமியை கர்ப்பமாக்கியுள்ளார். இதுகுறித்து திருப்பூர் - தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

     புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் ரியாசை கைது செய்யக்கோரி திருப்பூர் மாவட்ட பா.ஜனதா தலைவர் செந்தில் வேல் தலைமையில் வீரபாண்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். 

    இதையடுத்து போக்சோ சட்டத்தில் ரியாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    Next Story
    ×