search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு ஹோமம் நடந்தது.
    X
    சிறப்பு ஹோமம் நடந்தது.

    ஓதனவனேஷ்வரர் கோவிலில் அட்சய திருதியை வழிபாடு

    திருச்சோற்றுத்துறை ஓதனவனேஷ்வரர் கோவிலில் அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    திருவையாறு:

    திருவையாறு அருகே திருச்சோற்றுத்துறை ஸ்ரீஅன்னபூரணி அம்பிகா சமேத ஸ்ரீ ஓதனவனேஷ்வரர் சுவாமி கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு நேற்று அன்னபூரணி அம்பாளுக்கு சிறப்பு ஹோமம், அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது. 

    அனைவருக்கும் அறுசுவை அன்னம் பாலிப்பு நடந்தது. ஏற்பாடுகளை அன்னபூரணி தர்ம சத்திரம் அறக்கட்டளை பரம்பரை அறங்காவலர் கண்ணன் மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தார்கள்.
    Next Story
    ×